search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தில்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.41 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்ட அடிக்கல்
    X

    புதிய பள்ளி கட்டிடத்திற்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புது வாழ்வு சங்க நிறுவனர் மோகன் சி. லாசரஸ், ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர் ஆகியோர் அடிக்கல் நாட்டியபோது எடுத்தபடம்.

    தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.41 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்ட அடிக்கல்

    • ஆதிநாதபுரம் ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் தற்காலிகமாக மாணவர்கள் பயின்று வந்தனர்.
    • ரூ. 41 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் ஆதிநாதபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தனியார் பள்ளிகளுக்கு நிகரான ஆரம்பக் கல்வி வழங்கப்பட்டு வருவதால் 250-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    பள்ளி கட்டிடம்

    இந்நிலையில் பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்து காணப்பட்டதால் ஆதிநாதபுரம் ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் தற்காலிகமாக மாணவர்கள் பயின்று வந்தனர். ஆதிநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புதுவாழ்வு சங்கத்தின் மூலம் ரூ.13 லட்சத்து 67 ஆயிரம் பங்களிப்புடன் ரூ. 41 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் - புது வாழ்வு சங்கம், நிறுவனர் மோகன் சி. லாசரஸ் பள்ளி புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

    ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜனகர் முன்னிலை வகித்தார். ஆதிநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துமாலை, ஆழ்வார் திருநகரி பேரூராட்சி மன்றத் தலைவர் சாரதா பொன்இசக்கி, ஆழ்வார்திருநகரி சேகரகுரு அருமைத் துரை, தலைமையாசிரியை சித்ரா, ஆதிநாதபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் கரும்பன், ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் வெள்ள பாண்டியன், காங்கிரஸ் தெற்கு மாவட்ட துணை தலைவர் சங்கர், இளைஞர் அணி மாவட்ட தலைவர் இசை சங்கர், ஆழ்வார் திருநகரி காங்கிரஸ் வட்டார தலைவர் கோதண்டராமன், ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் நகர தலைவர் கருப்பசாமி, ஆழ்வார் திருநகரி நகர தி.மு.க. செயலாளர் கோபிநாத், மாவட்ட பிரதிநிதி பாலசந்திரன், ஆழ்வை மேற்கு ஒன்றிய துணை செயலாளர் சிவசுப்பிரமணியன், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×