search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீனவர் சாவு
    X

    மீனவர் சாவு

    • மீன்பிடித்துக்கொண்டு கரை திரும்பியபோது கட்டுமரம் கவிழ்ந்து சண்முகம் கடலில் மூழ்கி மாயமானார்.
    • போலீசார், மீனவர்கள் உதவியுடன் 3 படகுகளில் கடலுக்கு சென்று சண்முகத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா தொடுவாய் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சண்முகம்(வயது 58). மீனவரான இவர், கட்டுமரத்தில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.

    அங்கு அவர் மீன்பிடித்துக்கொண்டு கரை திரும்பியபோது கட்டுமரம் கவிழ்ந்து சண்முகம் கடலில் மூழ்கி மாயமானார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சக மீனவர்கள் கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடல் கரை ஒதுங்கியது அதன் பேரில் போலீசார், மீனவர்கள் உதவியுடன் 3 படகுகளில் கடலுக்கு சென்று சண்முகத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால் அவரது உடல் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று அதிகாலை கொட்டாய்மேடு கடற்கரையில் சண்முகம் உடல் கரை ஒதுங்கியது.

    இதுதொடர்பாக தகவல் அறிந்த திருமுல்லைவாசல் கடலோர காவல் படை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×