search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டியில் கி.ரா நினைவு மண்டபம்  கட்டும் பணி தொடக்கம் - வைகோ  பங்கேற்பு
    X

    கி.ரா.நினைவு மண்டபம் கட்டும்பணியை வைகோ தொடங்கி வைத்த காட்சி. அருகில் மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ். 

    கோவில்பட்டியில் கி.ரா நினைவு மண்டபம் கட்டும் பணி தொடக்கம் - வைகோ பங்கேற்பு

    • சாகித்ய அகடாமி விருது பெற்ற மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நினைவு மண்டபம் கட்டும் விழா கோவில்பட்டி அருகே உள்ள இடைச்செவல் கிராமத்தில் நடைபெற்றது.
    • ம.தி.மு.க. பொதுச் செயலார் வைகோ எம்.பி. பங்கேற்றுநினைவு மண்டபம் கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    கோவில்பட்டி:

    சாகித்ய அகடாமி விருது பெற்ற மறைந்த எழுத்தாளர் கி.ரா. என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் நூற்றாண்டு விழா மற்றும் நினைவு மண்டபம் கட்டும் விழா அவரது பிறந்த ஊரான கோவில்பட்டி அருகே உள்ள இடைச்செவல் கிராமத்தில் நடைபெற்றது. இதில் ம.தி.மு.க. பொதுச் செயலார் வைகோ எம்.பி. பங்கேற்றுநினைவு மண்டபம் கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன், மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ், கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, ஒன்றிய பெருந்தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், தி.மு.க. மாவட்ட பொறியாளர் அணி ரமேஷ், ம.தி.மு.க. நகரச் செயலாளர் பால்ராஜ், மத்திய பகுதி செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர்கள் சரவணன், கேசவன், மாரிச்சாமி, செயற்குழு உறுப்பினர் கணேசன், இளைஞரணி செயலாளர் முத்துகிருஷ்ணன், செண்பகராஜ், முத்துப்பாண்டியன், வனராஜன், முத்துச்செல்வன், மாவட்டத் துணைச் செயலாளர் பவுன் மாரியப்பன் மாநில விவசாய அணி சிவகுமார், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பீக்லிபட்டி முருகேசன், சிவராமகிருஷ்ணன், குருவிகுளம் யூனியன் சேர்மன் விஜயலட்சுமி, ராம்குமார், மகாராஜா, தெய்வேந்திரன், எழுத்தாளர்கள் ஜெயபிரகாசம், உதயசங்கர், பிரபு, மற்றும் கி.ரா குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ம.தி.மு.க. மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ராஜகுரு வரவேற்று பேசினார்.

    Next Story
    ×