search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனத்தில்  பரபரப்பு: மரக்கடையில் பயங்கர தீவிபத்து
    X

    மரக்கடையில் தீ பற்றி எரிவதை படத்தில் காணலாம்.

    திண்டிவனத்தில் பரபரப்பு: மரக்கடையில் பயங்கர தீவிபத்து

    • திண்டிவனத்தில் பரபரப்பு மரக்கடையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
    • ஓட்டை பிரித்து உள்ளே சென்ற தீயணைப்பு வீரர்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நேரு வீதியில் கணபதி மரக்கடை இயங்கி வருகிறது. இந்த மரக்கடையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் திடீரென்று தீப்பற்றி எரிவதாக திண்டிவனம் நகர போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது. அதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு வாகனம் சென்றது. மரக்கடை உள்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால் பின்பக்கமாக சென்று ஓட்டை பிரித்து உள்ளே சென்ற தீயணைப்பு வீரர்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

    சரியான நேரத்தில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததால் தீயானது அங்குள்ள மரங்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. மரம் அறுக்கும் இயந்திரம் மட்டும் எரிந்துக் கொண்டிருக்கும் பொழுது தீ அணைக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் காலதாமதமாக சென்றிருந்தால் தீ அருகில் உள்ள மரங்களுக்கு பரவி பெரும் தீ விபத்து ஏற்பட்டிருக்கும். மரம் அறுக்கும் இயந்திரத்திற்கு வரும் மின் இணைப்பை நிறுத்தாமல் சென்றதால் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    Next Story
    ×