என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண்ணை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி வீசிய கொடூரம்
    X

    போலீசார் பெண்ணின் உடலை மீட்ட போது எடுத்தபடம்.

    இளம்பெண்ணை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி வீசிய கொடூரம்

    • 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருந்தது.
    • சாக்கு மூட்டையில் கட்டி ஏரிக்கரையில் வீசி சென்றுள்ளது தெரிய வந்தது.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே ஆந்திர மாநில எல்லையானஓ.என்.கொத்தூர் கிராமம் உள்ளது. இங்குள்ள ஏரியில் நேற்று துர்நாற்றம் வீசியது.

    இதையடுத்து அந்த வழியாக வந்த பொதுமக்கள் அருகில் சென்று பார்த்தனர். அப்போது ஏரிக்கரையில் மூட்டை ஒன்று கிடந்தது.

    இதுகுறித்து அவர்கள் குடிப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூட்டையை பிரித்து பார்த்தனர். அதில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருந்தது.

    அவரை அடித்து க்கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி ஏரிக்கரையில் வீசி சென்றுள்ளது தெரிய வந்தது.

    கொலை செய்யப்பட்ட பெண் சுடிதார் அணிந்த நிலையில் இருந்தார். உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

    உடலில் கழுத்து உள்பட பல இடங்களில் காயங்கள் இருந்தன.இதைத் தொடர்ந்து போலீசார் அந்த உடலை மீட்டு குப்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வேப்பனப்பள்ளி அருகே மாநில எல்லையில் உடல் கிடந்ததால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் காணாமல் போன இளம்பெண்கள் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    மேலும் அந்த இளம்பெண்ணை கொன்று உடலை சாக்குமூட்டையில் கட்டி ஏரியில் வீசி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×