search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமலாக்கத்துறையை பா.ஜனதா அரசு சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகிறது- முத்தரசன்
    X

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்.

    அமலாக்கத்துறையை பா.ஜனதா அரசு சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகிறது- முத்தரசன்

    • பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றி ணைந்து வியூகம் வகுத்து வருகின்றன.
    • ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றி ணைந்து வியூகம் வகுத்து வருகின்றன. அந்த வகையில், பீகாரில் முதல் கூட்டமும், பெங்களூரில் 2-வது கூட்டமும் நடத்தப்பட்டது.அமலாக்கதுறையை பா.ஜனதா அரசு சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகிறது. நெருக்கடி நிலையில் இருந்து தற்காத்து கொள்ள அமலாக்கத்துறையை கொண்டு எதிர்க்கட்சி தலைவர்களை, நிர்வாகி களை கைது செய்வது, அச்சுறுத்துவது போன்ற ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கை யில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×