என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முதியவர் மர்மச்சாவு
- திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள குன்னாங்கல்பாளையம் வீரபாண்டியை அடுத்துள்ள துத்திக்காடுதோட்டம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
- தஞ்சை-திருச்சி சாலையில் உள்ள பஸ் நிறுத்தம் அருகில் தங்கி இருத்ததாக தெரிகிறது.
வல்லம்:
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி காசநோய் மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் முதியவர் ஒருவர் சிகிச்சைக்காக வந்துள்ளார். சிகிச்சை முடிந்து அவர் செங்கிப்பட்டி பஸ் நிலையம் வந்துள்ளார். இதனையடுத்து இரவு தஞ்சை-திருச்சி சாலையில் உள்ள பஸ் நிறுத்தம் அருகில் தங்கி இருத்ததாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று அதிகாலையில் அங்குள்ள கடையின் வாசல் அருகே சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்தவர் பையில் பார்த்த போது ஆதார் கார்டு இருந்துள்ளது.
அதில் அவர் பெயர் சேகர் (63), திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள குன்னாங்கல்பாளையம் வீரபாண்டியை அடுத்துள்ள துத்திக்காடுதோட்டம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து சடலமாக கிடந்த சேகரின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்கு ப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்னரே முதியவர் சேகர் கொலை செய்யப்பட்டாரா? விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது உடல்நலம் பாதிப்பில் இறந்தாரா என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்