என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிளை நிறுத்துவதில் தகராறு - 6 பேர் கைது
- ராஜ்குமார் மோட்டார் சைக்கிளை ஒரமாக நிறுத்துமாறு கூறினார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- இந்த தாக்குதலில் விக்னேஷ், ஜெயலட்சுமி. முகேஷ் ஆகியோர் காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
சுவாமிமலை:
சுவாமிமலை அருகே திருவலஞ்சுழி டாஸ்மார்க் கடையில், அப்பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் மற்றும் பிரவீன் இருவரும் மதுபான வாங்க சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த, முருகேஷ் என்பவர் மோட்டார் சைக்கிளை சாலையின் குறுக்கே நிறுத்தி நின்று கொண்டிருந்தார்.
இதையடுத்து, ராஜ்குமார் மோட்டார் சைக்கிளை ஒரமாக நிறுத்துமாறு கூறினார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி முருகேஷ் தனது கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் ராஜ்குமாரின் தலையில் அடித்துள்ளார். அதில் ராஜ்குமாருக்கு தலையில் ரத்த காயம் ஏற்பட்டது.
இந்த தகவலை அறிந்த சுவாமிமலை கலைஞர் காலனியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 22), பிரவீன் (23), விஜயகுமார் (24) உள்பட 7 பேர் திருவலஞ்சுழி அம்மன் திடலில் உள்ள முருகேஷ் வீட்டிற்கு சென்று தகராறு செய்து முருகேசனின் உறவினரான விக்னேஷ் (20), தினேஷ் ராமச்சந்திரன் மற்றும் சண்டையை தடுக்க வந்த ஜெயலட்சுமி ஆகிய 3 பேரை தாக்கினர். இது இரு தரப்பு மோதலாக மாறியது.
இந்த தாக்குதலில் விக்னேஷ், ஜெயலட்சுமி. முகேஷ் ஆகியோர் காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) பேபி வழக்குபதிவு செய்து இருதரப்பை சேர்ந்த 6 பேரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்