search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையப்பர் கோவிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் கொடியேற்றம் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

    நெல்லையப்பர் கோவிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • தென்தமிழகத்தில் பிரசித்திபெற்ற சிவாலயங்க ளுள் நெல்லை நெல்லையப்பர்- காந்திமதியம்மாள் கோவிலும் ஒன்றாகும்.
    • இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அதன் ஒரு நிகழ்வாக தைபூசத் திருவிழா இன்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    நெல்லை:

    தென்தமிழகத்தில் பிரசித்திபெற்ற சிவாலயங்க ளுள் நெல்லை நெல்லையப்பர்- காந்திமதியம்மாள் கோவிலும் ஒன்றாகும்.

    இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அதன் ஒரு நிகழ்வாக தைபூசத் திருவிழா இன்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவினை முன்னிட்டு கோவில் திருநடை அதிகாலையில் திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை , விஸ்வரூப பூஜை ஆகியவை நடைபெற்றது. பின்னர் திருக்கொடி பல்லக்கில் ரதவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

    தொடா்ந்து சுவாமி சன்னதி முன் அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. கொடி மரத்திற்கு மஞ்சள்பொடி, மாப்பொடி, வாசனைப்பொடி, பால், தயிா், இளநீா், விபூதி, சந்தனம் உள்ளிட்ட அபிசேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிசேகமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    ெதாடர்ந்து 12 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருநெல்வேலி என மாவட்டத்திற்கு பெயர் வர காரணமான நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் வைபவம் வருகிற 29-ந் தேதி நடைபெறுகின்றது.

    தைப்பூச தீர்த்தவாரி நிகழ்ச்சி வருகிற 4-ந் தேதியும், சவுந்தர சபையில் நடராஜபெருமான் திருநடனக் காட்சி 5-ந் தேதியும், தெப்பத்திருவிழா 6-ந் தேதியும் நடைபெறுகிறது.

    Next Story
    ×