என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நடுவட்டம் மலைப்பாதையில் பயங்கர காட்டுத்தீ
Byமாலை மலர்26 March 2023 9:00 AM GMT
- தெய்வ மலை மற்றும் தவள மலை வனப்பகுதியில் பயங்கர காட்டு தீ பரவியது.
- சிறு வன உயிரினங்கள் தீயில் எரிந்து சாம்பலானது.
கூடலூர்
கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் பேரூராட்சி உள்ளது. இதை சுற்றிலும் அடர்ந்த வனங்கள் உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு மலைப்பாதையில் உள்ள தெய்வ மலை மற்றும் தவள மலை வனப்பகுதியில் பயங்கர காட்டு தீ பரவியது.
இதைக் கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஊட்டி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர், ஆனால் சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் வராததால் காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது. இதனிடையே தெய்வமலை கிராம மக்கள் அச்சமடைந்தனர்.
தொடர்ந்து வன ஊழியர்கள் அப்பகுதிக்கு வந்து காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர், இருப்பினும் அரிய வகை மூலிகைகள், தாவரங்கள் மற்றும் சிறு வன உயிரினங்கள் தீயில் எரிந்து சாம்பலானது. காட்டுத் தீயால் சேதமடைந்த வனத்தின் பரப்பளவு குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X