search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுரண்டையில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம்
    X

    கூட்டத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. ஜெயபாலன் பேசிய காட்சி.

    சுரண்டையில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம்

    • தென்மண்டலத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் ராமநாதபுரத்தில் நடை பெறுகிறது.
    • மாநாட்டிற்கு இளைஞர் அணியினரை அதிக அளவில் அழைத்து செல்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

    சுரண்டை:

    தென்காசி தெற்கு மாவட்ட தி.முக. இளை ஞரணி ஆலோசனை கூட்டம் சுரண்டையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் நடந்தது.

    மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் அப்துல் காதர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரன், மாவட்ட தொண்டரணி அமைப் பாளர் இசக்கி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணா ராஜா வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளை நியமனம் செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வருகிற 7-ந் தேதி மாவட்ட தி.மு.க. சார்பிலும், மாவட்ட இளை ஞரணி சார்பிலும் அவரது உருவப்ப டத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.

    தலைமை கழகத்தால் தென்காசி தெற்கு மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்பாளராக நியமிக்க ப்பட்ட ஜெய பாலனுக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் வாழ்த்து தெரி விப்பது, தென்மண்டலத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பா ளர்கள் கூட்டம் ராம நாதபுரத்தில் நடை பெறுகிறது.

    கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுவதை முன்னிட்டு மாவட்ட கழக ஒத்துழைப்போடு ஒன்றிய, நகர, பேரூர் கழக செய லாளர் ஒத்துழைப்போடு வாக்குச்சாவடி பொறுப் பாளர்களை மேற்படி கூட்டத்திற்கு அழைத்துச் செல்வது, வருகிற டிசம்பர் மாதம் இளைஞரணி 2-வது மாநில மாநாடு சேலத்தில் நடத்த அனுமதி வழங்கிய தி.மு.க. தலைவருக்கு நன்றி தெரிவித்தும், மேற்படி மாநாட்டிற்கு இளைஞரணி செயலாளரின் அறிவுறு த்தலின்படி மாநாட்டிற்கு இளைஞர் அணியினரை அதிக அளவில் அழைத்து செல்வது, இல்லம் தேடி உறுப்பி னர் சேர்க்கையை ஒன்றிய, நகர, பேரூர் உள்பட அனைத்து இடங்க ளிலும் மேலும் அதிகப் படுத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் இளைஞர் அணி துணை அமைப் பாளர்கள் சிவக்குமார் ஐவேந்திரன்கிருஷ்ணராஜ் சுப்பிரமணியன் முகமது அப்துல் ரஹீம் மற்றும் பகுத்தறிவு பேரவை ஆறு முகம் வக்கீல் சக்தி சுப்பிர மணியன் நன்றி கூறினார்.

    Next Story
    ×