என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவிலில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தென்காசி மாவட்ட மாநாடு - மாநில பொதுச் செயலாளர் கதிரவன் பங்கேற்பு
    X

    அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தென்காசி மாவட்ட மாநாடு நடந்த போது எடுத்த படம்

    சங்கரன்கோவிலில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தென்காசி மாவட்ட மாநாடு - மாநில பொதுச் செயலாளர் கதிரவன் பங்கேற்பு

    • சங்கரன்கோவிலில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட மாநாடு ரெயில்வே பீடர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
    • சிறப்பு அழைப்பாளராக பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கதிரவன் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட மாநாடு ரெயில்வே பீடர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. தென்காசி மாவட்ட பொதுச் செயலாளர் தங்கபாண்டியன் தலைமை தாங்கினார்.தென்காசி மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் இளையரசு, மாநில செயலாளர் பசும்பொன், மாணவர் அணி மாநில செயலாளர் பாஸ்கரபாண்டியன், மாவட்ட நிதித்துறை செயலாளர் சுப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கதிரவன் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி குறித்த ஆலோசனைகளை வழங்கினார். இதில் விருதுநகர் மாவட்ட துணை தலைவர் சோனமுத்து, மாவட்ட பொருளாளர் ஆறுமுகசாமி, தொழில் சங்கத்தை சேர்ந்த முருகேசபாண்டியன், சுந்தர், ஒன்றிய செயலாளர் சவுந்தரபாண்டியன், முன்னாள் தலைவர் சுப்பிரமணியன், வாசு. ஒன்றிய தலைவர் மாரியப்பன், நகர செயலாளர் முத்துப்பாண்டி மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×