என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
கோவில்களை அறநிலையத்துறையால் மட்டுமே சிறப்பாக பராமரிக்க முடியும் - ஆன்மீக சொற்பொழிவாளர் சுகி.சிவம் பேச்சு
- எது செய்தால் நமக்கு அருள் கிடைக்கும் என்பதை நாம் அறிய வேண்டும்.
- தயவு உருவாகும் உள்ளங்களிலே இறைவன் இருப்பார்.
திருப்பூர் :
வள்ளலார் - 200 முப்பெரும் விழா திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது.
இதில் ஆன்மீக சொற்பொழிவாளர் சுகி.சிவம் பேசியதாவது:- கோவில்களை அறநிலையத்துறையால் மட்டுமே சிறப்பாக பராமரிக்க முடியும். வள்ளலாரை எதற்கு கொண்டாடுகிறோம். எது செய்தால் நமக்கு அருள் கிடைக்கும் என்பதை நாம் அறிய வேண்டும்.
அதற்கு பெரிய மந்திரம், ஆகமம், வேதம் எல்லாம் கிடையாது. கடவுளை உணர தயவு ஒன்று தான் பயன்படும்.பிற உயிர்களின் மீதான கருணை ஒன்று தான், 'என்னை ஏறாத மேல்நிலை மேல் ஏற்றியது என்கிறார் வள்ளலார்.
பிறர் மீது இருக்கும் கருணை, அன்பு, மற்றவர் நன்றாக இருக்க வேண்டும் என்ற நினைப்பு, துக்கப்படக்கூடாது என்ற தவிப்பு, இந்த தயவு தான் வேண்டும். ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவு கோல். வள்ளலாரை புரிந்து கொள்ள வேண்டும்.மாறுவதற்கு தயாராக உள்ளவர்கள் தான் திருவருட்பா படிப்பதற்கு தகுதியானவர்கள். தயவு உருவாகும் உள்ளங்களிலே இறைவன் இருப்பார்.
இவ்வாறு சுகி.சிவம் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்