என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரு சக்கர வாகனங்கள் மோதி வாலிபர் பலி
    X

    இரு சக்கர வாகனங்கள் மோதி வாலிபர் பலி

    • எதிர்பாராத விதமாக இரண்டு வாகனங்களும் நேர்க்கு நேர் மோதிக்கொண்டன.
    • மொபட்டில் சென்றபோது தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அப்பாவு நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 19). இவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

    எதிரே அனுஷா (24) என்பவர் மற்றொரு மொபட்டில் வந்துள்ளார். எதிர்பாராத விதமாக இரண்டு வாகனங்களும் நேர்க்கு நேர் மோதிக்கொண்டன.

    இதில் அப்பாவு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அனுஷா படுகாயம் அடைந்தார். அவரை ஓசூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.

    இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டம் பஞ்சாத்திபுரம் புறம் பகுதியை சேர்ந்த வேங்கடப்பா (55) என்பவர் மொபட்டில் சென்றபோது தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து அவரது மகள் ஷோபா கொடுத்த புகாரின்பேரில் கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×