என் மலர்
உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
- அண்ணாதுரை (வயது 24). இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது.
- இருட்டுக்கல் முனியப்பன் கோவில் அருகில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
சேலம்:
சேலம் வீராணம் அருகே உள்ள ஏரி வயக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் அண்ணாதுரை (வயது 24). இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. அதனால் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதை அவரது தாயார் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அண்ணாதுரை, கடந்த 2-ந் தேதி இருட்டுக்கல் முனியப்பன் கோவில் அருகில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த, உறவினர்கள் அண்ணாதுரையை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அண்ணாதுரை, நேற்று மாலை உயிரிழந்தார். இதுகுறித்து வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






