search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிங்கப்பூர் நிறுவனத்துடன் தமிழ்பல்கலைக் கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
    X

    புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    சிங்கப்பூர் நிறுவனத்துடன் தமிழ்பல்கலைக் கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

    • கற்றல் - கற்பித்தல் - களப்பணியாற்றல் ஆகிய மூன்று நிலைகளில் இந்த ஒப்பந்தம் செயல்பட வழிவகுத்துள்ளது.
    • புரிந்துணர்வு ஒப்பந்தக் கையெழுத்து நிகழ்வுக்கான ஏற்பாடுகளை அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறைத் தலைவர் பேராசிரியர்குறிஞ்சிவேந்தன் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூர் மாணவர்களை ஆளுமைத்திறன் பயிற்சி மற்றும் தலைமைத்துவப் பயிற்சிகளுக்காக ஆயத்தப்படுத்தும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    சிங்கப்பூரை சேர்ந்த ஏஸ் பன்னாட்டு நிறுவனத்துடன் இணைந்து இந்த திட்டத்தினை விரைவில் செயல்படுத்த உள்ளதாக தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் தெரிவித்தார்.

    சிங்கப்பூரைச் சேர்ந்த ஏஸ் பன்னாட்டுக் கல்வி மற்றும் பயிற்சிக்கான நிறுவனத்துடனான இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) முனைவர் சி.தியாகராஜன் மற்றும் ஏஸ் நிறுவன செயல்இயக்குநர் டாக்டர் இராமதாதன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    கற்றல் - கற்பித்தல் - களப்பணியாற்றல் ஆகிய மூன்று நிலைகளில் இந்த ஒப்பந்தம் செயல்பட வழிவகுத்துள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூரில் பயிலும் மாணவர்களுக்கு நவீனச்சூழலுக்கு ஏற்ப ஆளுமைத்திறன் மற்றும் தலைமைத்துவப்பயிற்சி, மேலாண்மைக் கூறுகளில் பயிலரங்கங்கள் ஆகியவை இதன்வழி நடத்தப்பட உள்ளன.

    மேலும் இருதரப்பு ஆசிரியர்களுக்கான கருத்தரங்கப் பங்கேற்பு வாய்ப்புகள் மற்றும் புத்தொளிப் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பெறும் என்று இந்நிகழ்வில் பங்கேற்ற துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் தெரிவித்தார். புரிந்துணர்வு ஒப்பந்தக் கையெழுத்து நிகழ்வுக்கான ஏற்பாடுகளை அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறைத் தலைவர் பேராசிரியர் இரா.குறிஞ்சிவேந்தன் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

    Next Story
    ×