search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணகுடியில் வாலிபர் அடித்துக்கொலை- மர்மநபர்களுக்கு வலைவீச்சு
    X

    பணகுடியில் வாலிபர் அடித்துக்கொலை- மர்மநபர்களுக்கு வலைவீச்சு

    நெல்லை மாவட்டம் பணகுடியில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் பணகுடி மங்கம்மாள் சாலையை சேர்ந்தவர் ராமன். இவரது மகன் பசுபதி(வயது 23). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். தினமும் வேலையை முடித்துவிட்டு இரவில் வீட்டுக்கு திரும்புவது வழக்கம். நேற்று வழக்கமாக அவர் செல்லும் வழியில் உள்ள சிவகாமி அம்மன் கோவில் பின்புறம் உள்ள பாழடைந்த வீட்டில் படுகாயங்களுடன் உயிரிழந்து கிடந்தார். இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பசுபதி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே பணகுடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பசுபதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலில் தாக்கப்பட்ட காயங்கள் இருந்தது. இதனால் அவரை மர்மநபர்கள் கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பசுபதி கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் காலி மதுபாட்டில்கள், கஞ்சா பொட்டலங்கள் கிடந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் கஞ்சா புதைத்துக்கொண்டிருந்த மர்மநபர்கள், போதையில் அந்த வழியாக வந்த பசுபதியை அடித்துக்கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் அருண் ராஜா தலைமையில் தனிப்படை அமைத்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×