என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபரை கத்தியால் வெட்டி செல்போன், பணம் பறிப்பு
- ரஞ்சித்குமார் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மறைமலைநகர்:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 25). இவர் மகேந்திரா சிட்டி பகுதியில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று தனது சொந்த ஊருக்கு சென்று விட்டு மீண்டும் பஸ் மூலம் சிங்கப்பெருமாள் கோவிலில் வந்து இறங்கினார். பின்னர் தங்கி இருக்கும் இடத்திற்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென ரஞ்சித் குமாரை வழிமறித்து கத்தியால் அவரை வெட்டிவிட்டு அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து ரஞ்சித்குமார் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






