search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இண்டர்நெட் கேபிள் பதிக்க வேண்டிய பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் விழுந்து வாலிபர் பலி
    X

    இண்டர்நெட் கேபிள் பதிக்க வேண்டிய பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் விழுந்து வாலிபர் பலி

    • பலத்த காயம் அடைந்த வாலிபரை மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
    • மருத்துவமனையில் வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகேயுள்ள மேலகண்ட கிராமத்தை சேர்ந்தவர் நசீர் (வயது 37). சமையல் தொழிலாளி. இவர் கடந்த 6-ந்தேதி இரவு சமையல் வேலைக்காக சென்றார். பின்னர் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    வரும் வழியில் விழுதமங்கலம் கூட்டுரோடு பகுதியில் இண்டர்நெட் கேபிள் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. அதில் எச்சரிக்கை பலகை வைக்கப்படவில்லை. சாலையில் திரும்பும் வழியில் பள்ளம் இருந்ததால் நசீர் அதை கவனிக்கவில்லை. இதனால் மோட்டார் சைக்கிள் பள்ளத்துக்குள் விழுந்தது.

    இதில் பலத்த காயம் அடைந்த அவரை மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

    இதையடுத்து அவரது உறவினர்கள், நண்பர்கள் இன்று மதுராந்தகம்-பவுஞ்சூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அங்கு வந்து அவர்களை சமரசம் செய்தனர்.

    வாலிபர் இறந்தது தொடர்பாக சித்தாமூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×