என் மலர்
உள்ளூர் செய்திகள்

இளம்பெண்ணை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் பதிவிட்டவர் கைது
- சிபி தனது முகநூல் பக்கத்தில் திவ்யாவை பற்றி ஆபாசமாக சித்தரித்து பதிவு செய்துள்ளார்.
- அதிர்ச்சியடைந்த திவ்யா கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டணம் அடுத்துள்ள பொன்மலைநகர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி திவ்யா (வயது 28).
இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்த போது மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள கருவலூர் பகுதியை சேர்ந்த சிபி (28) என்ற வாலிபர் உடன் படித்துள்ளார்.
இந்நிலையில் சிபி தனது முகநூல் பக்கத்தில் திவ்யாவை பற்றி ஆபாசமாக சித்தரித்து பதிவு செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த திவ்யா கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிபியை கைது செய்தனர்.
Next Story






