என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
- திருமணமானதை மறைத்து காதலித்து ஏமாற்றி கர்ப்பமாக்கிய எபிநேசர் மீது இளம்பெண் திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
- இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து எபிநேசரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த கொண்டஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் எபிநேசர்(38) தனியார் தொழிற்சாலை டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் எபினேசர் தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்து உடன் வேலைபார்த்து வரும் கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுடன் நட்பாக பழகினார். மேலும் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பிய இளம்பெண் எபிநேசருடன் நெருக்கமாக பழகி வந்தார்.
இதற்கிடையே இளம்பெண் கர்ப்பமானார். தற்போது அவர் 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதையடுத்து அவர் எபிநேசரிடம் தன்னை உடனடியாக திருமணம் செய்ய வற்புறுத்தினார். அப்போதுதான் அவர் தனக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருப்பதாக கூறி மிரட்டல் விடுத்தார். இதனை கேட்டு இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, திருமணமானதை மறைத்து காதலித்து ஏமாற்றி கர்ப்பமாக்கிய எபிநேசர் மீது இளம்பெண் திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து எபிநேசரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.






