என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருக்கழுக்குன்றத்தில் ஓட்டல் உரிமையாளருக்கு கத்தி குத்து- வாலிபர் கைது
- சரத்குமார் மீது மறைமலைநகர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
- சரத்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுகாயம் அடைந்த ரமேஷ் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் பஸ் நிலையம் அருகே பாஸ்ட் புட் கடை நடத்தி வருபவர் ரமேஷ். இவரது கடைக்கு வந்த வாலிபர் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றார். இதனை ரமேஷ் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் திடீரென ரமேசை கத்தியால் குத்தினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் சிங்கப்பெருமாள் கோவிலை சேர்ந்த சரத்குமார் (28) என்பதும், இவர் மீது மறைமலைநகர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுகாயம் அடைந்த ரமேஷ் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Next Story






