search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூரில் கள்ளக்காதலனுடன் சென்ற இளம்பெண் கொலை
    X

    திருவள்ளூரில் கள்ளக்காதலனுடன் சென்ற இளம்பெண் கொலை

    • கள்ளக்காதல் ஜோடி திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுப்பம், கம்பர் தெருவில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தனர்.
    • கடந்த சில நாட்களாக கள்ளக்காதல் ஜோடி வீடு பூட்டியே கிடந்தது.

    திருவள்ளூர்:

    சோழவரம் அடுத்த எருமை வெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு. தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக உள்ளார். இவரது மனைவி அமுதா (வயது30). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    அமுதாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜோதீஸ்வரன் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த பாபு, மனைவியை கண்டித்தும் கேட்கவில்லை. அவர் தொடர்ந்து கள்ளக்காதலனுடன் பழகி வந்தார்.

    கடந்த 2 மாதத்திற்கு முன்பு கணவர் மற்றும் குழந்தைகளை தவிக்க விட்டு அமுதா தனது கள்ளக்காதலன் ஜோதீஸ்வரனுடன் ஓட்டம் பிடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாபு, தனது மனைவியை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதற்கிடையே கள்ளக்காதல் ஜோடி திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுப்பம், கம்பர் தெருவில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தனர். கடந்த சில நாட்களாக அவர்களது வீடு பூட்டியே கிடந்தது.

    இந்த நிலையில் அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் திருவள்ளூர் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபபி மற்றும் போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து பார்த்த போது அமுதா உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். உடன் தங்கி இருந்த கள்ளக்காதலன் மாயமாகி இருந்தார்.

    அமுதாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அமுதாவின் உடல் அழுகிய நிலையில் இருப்பதால் அவர் இறந்து ஒரு வாரம் இருக்கும் என்று தெரிகிறது. அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது தொடர்பாக அமுதாவுடன் தங்கி இருந்த காதலன் ஜோதீஸ்வரனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர். அவர் சிக்கினால் தான் அமுதா எப்படி இறந்தார் என்பது தெரியவரும்.

    கொலையுண்ட அமுதா இதற்கு முன்பும் 2 முறை ஜோதீஸ்வரனுடன் ஓட்டம் பிடித்ததாக தெரிகிறது. அப்போது அவர் இருக்கும் இடம் தெரிந்து பாபு சமாதானம் பேசி அழைத்து வந்து உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 3-வது முறையாக அமுதா ஓட்டம் பிடித்தபோது பாபுவுக்கு அவரது நண்பர் ஒருவர் மூலம் இருக்கும் இடம் தெரிந்து உள்ளது.

    அப்போது பாபு, மனைவி அமுதாவை சந்தித்து பேசியபோது, கள்ளக்காதலன் ஜோதீஸ்வரன் தன்னை ஏமாற்றி விட்டதாக தெரிவித்து சென்று இருக்கிறார். இதன் பின்னர் அமுதா கொலை செய்யப்பட்டு உள்ளார்.

    இது தொடர்பாக பாபுவின் நண்பரிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர். கள்ளகாதலனுடன் சென்ற இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×