search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருத்தணி அருகே பாம்பு கடித்ததில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற தொழிலாளி பலி
    X

    திருத்தணி அருகே பாம்பு கடித்ததில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற தொழிலாளி பலி

    • விகிதாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருத்தணி:

    திருத்தணி அடுத்த வி.சி. ஆர். கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது30). கட்டிட தொழிலாளி. இவரது மகள் விகிதா(7). கடந்த வாரம் பாலாஜி குடும்பத்துடன் குடிசை வீட்டில் தூங்கினார்.

    நள்ளிரவில் பாலாஜி, அவரது மகள் விகிதா ஆகிய 2 பேரையும் பாம்பு கடித்து சென்று விட்டது.

    இதில் உயிருக்கு போராடிய அவர்கள் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பாலாஜி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகள் விகிதாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×