search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    16 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய ஓட்டல் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
    X

    16 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய ஓட்டல் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது

    • சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி தண்டபாணி சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டு பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார்.
    • அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக தண்டபாணி ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்திருந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு முத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 32 ). இவர் ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அப்போது அந்த ஓட்டலுக்கு 16 வயது சிறுமி அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமியிடம் தண்டபாணி பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு நெருங்கி பழகி உள்ளார்.

    இந்நிலையில் அந்த சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி தண்டபாணி சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டு பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். பின்னர் அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக தண்டபாணி ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்திருந்தார். சிறுமியின் வயதில் சந்தேகம் அடைந்த டாக்டர்கள் இது குறித்து அந்த சிறுமிடம் கேட்டபோது நடந்த சம்பவத்தை அவர் கூறினார்.

    இது குறித்து ஈரோடு அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் தண்டபாணியை பிடித்து விசாரித்த போது சிறுமிக்கு 16 வயதே ஆவது தெரியவந்தது.

    இதை அடுத்து தண்டபாணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×