search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி தலையில் குழவிக்கல்லை போட்டு கொன்ற கணவர்
    X

    நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி தலையில் குழவிக்கல்லை போட்டு கொன்ற கணவர்

    • பெற்றோர்களின் வற்புறுத்தலால் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தனர்.
    • கொலை செய்யப்பட்ட நித்திய காமாட்சியின் தாயார் இளஞ்சியம் அன்னவாசல் போலீசில் புகார் செய்தார்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே அன்னவாசல் மேட்டு தெரு ஜெ.ஜெ,காலனி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 35). இவர் பக்கத்து வீட்டை சேர்ந்த அடைக்கலம் மகள் நித்திய காமாட்சி (24) என்பவரை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார்.

    இந்த தம்பதியருக்கு அஸ்வந்த் என்ற மகனும் நிவாஸ்ரீபுவிஅட்சரா என்ற மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் சமீபகாலமாக மனைவியின் நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் மனைவியுடன் அடிக்கடி சண்டைபோட்டு வந்தார்.

    பின்னர் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தையும் நடந்துள்ளது.

    இருந்த போதிலும் மனைவி மீதான கோபம் அடங்காத பால்ராஜ் கடந்த டிசம்பர் மாதம் நித்தியகாமாட்சி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது அடுப்பில் இருந்த நெருப்பு கனல்களை அள்ளி அவரது முதுகில் போட்டார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை பெற்றோர்கள் மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினர்.

    பின்னர் பெற்றோர்களின் வற்புறுத்தலால் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தனர். இதற்கிடையே மீண்டும் அவர்களுக்கிடையே நேற்று இரவு மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பால்ராஜ் இன்று அதிகாலை மனைவி அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த போது அவரது தலையில் குழவிக்கல்லை போட்டார். இதில் அவரது தலை நொறுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே நித்திய காமாட்சி துடிதுடித்து இறந்தார்.

    பின்னர் போலீசுக்கு பயந்து பால்ராஜ் தன்தை தானே கழுத்தை கத்தியால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து கொலை செய்யப்பட்ட நித்திய காமாட்சியின் தாயார் இளஞ்சியம் அன்னவாசல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் தலையில் குழவிக்கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு கணவன் முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×