என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல்- வாலிபர் பலி
- திருப்பாச்சூர் அருகே திடீரென முன்னாள் சென்ற வேன் திரும்பியது. இதில் சாந்தகுமார் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது பலமாக மோதியது.
- தலையில் பலத்த காயம் அடைந்த சாந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அருகே உள்ள கடம்பத்தூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சாந்தகுமார் (வயது 30). இவர் கடம்பத்தூர் பகுதியில் இருந்து திருவள்ளூர் நோக்கி நேற்று இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார்.
திருப்பாச்சூர் அருகே திடீரென முன்னாள் சென்ற வேன் திரும்பியது. இதில் சாந்தகுமார் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது பலமாக மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சாந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளூர் தாலுக்கா சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






