என் மலர்
உள்ளூர் செய்திகள்

டிரைவர் கொலை வழக்கில் வாலிபர் கைது
- முன்விரோதத்தில் ஏற்பட்ட தகராறில் ராஜி கம்பியால் பார்த்திபனை குத்தியதாக தெரிகிறது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜியை தேடி வந்தனர்.
உத்திரமேரூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் நரசிம்மன் நகரை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 35). டிரைவர். முன்விரோதத்தில் ஏற்பட்ட தகராறில் ராஜி (31) கம்பியால் பார்த்திபனை குத்தியதாக தெரிகிறது. இதில் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜியை தேடி வந்தனர். இந்த நிலையில் உத்திரமேரூர் அடுத்த கடல்மங்கலம் ராமகிருஷ்ணா பள்ளி அருகே பதுங்கி இருந்த ராஜியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
Next Story






