search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கல்பட்டு அருகே ரெயில் மோதி இளம்பெண் பலி
    X

    செங்கல்பட்டு அருகே ரெயில் மோதி இளம்பெண் பலி

    • பலியான இளம்பெண் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.
    • இளம்பெண்ணுக்கு சுமார் 35 வயது இருக்கும். அவரது உடல் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அடுத்த படாளம்-கருங்குழி இடையே உள்ள அரியவாக்கம் பகுதியில் இளம்பெண் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

    அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த ரெயில் அந்த பெண் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதுகுறித்து செங்கல்பட்டு ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பலியான பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

    பலியான இளம்பெண் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவருக்கு சுமார் 35 வயது இருக்கும். அவரது உடல் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

    பலியான பெண்ணை அடையாளம் காணும் முயற்சியில் ரெயில்வே போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இது தொடர்பாக மாயமானவர் பற்றிய விபரத்தை சேகரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×