என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் டாஸ்மாக் ஊழியர் பலி
- திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பாஸ்கரன்.
- விபத்தில் டாஸ்மாக் ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பாஸ்கரன் (42). பேரம்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் இரவுமோட்டார் சைக்கிளில் சிவபுரத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.
நரசிங்கபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பாஸ்கரன் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த பாஸ்கரன் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து மப்பேடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Next Story






