என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விவசாயி உழுது செய்த போது வயலில் உலா வந்த புலி
- வயலுக்குள் டிராக்டர் ஒன்றில் விவசாயி ஒருவர் தனது நிலத்தில் உழுது செய்து கொண்டிருக்கிறார்.
- ஒரு பயனர், விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இடையேயான நல்லிணக்கத்திற்கு இந்த வீடியோ சரியான எடுத்துக்காட்டு என கூறி உள்ளார்.
மனிதர்கள்-விலங்குகள் இடையே மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், உத்தரபிரதேசம் மாநிலத்தில் பிலிபித் மாவட்டத்தில் உள்ள ஒரு வயலில் புலி ஒன்று உலா வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
அதில், வயலுக்குள் டிராக்டர் ஒன்றில் விவசாயி ஒருவர் தனது நிலத்தில் உழுது செய்து கொண்டிருக்கிறார். அந்த இடத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் வரிப்புலி ஒன்று சாதாரணமாக நடந்து செல்வதை காண முடிகிறது. இதை மற்றொரு விவசாயி வீடியோவாக பதிவு செய்துள்ளார். அதனை ராஜ்லக்கானி என்பவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் புலியையும், மனிதனையும் இவ்வளவு நெருக்கமாக பார்த்ததில்லை என பதிவிட்டுள்ளனர்.
வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே 1 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது. 2 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக்ஸ் செய்துள்ளனர். அதில் ஒரு பயனர், விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இடையேயான நல்லிணக்கத்திற்கு இந்த வீடியோ சரியான எடுத்துக்காட்டு என கூறி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்