என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை
- பீரோவில் இருந்த 17 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
- திருவள்ளூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கமல்ஹாசன் விசாரித்து வருகிறார்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த காக்களூர், மாருதி நியூடவுன், வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மேஷாக். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஆந்திர மாநிலம், நகரியில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார்.
பின்னர் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 17 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கமல்ஹாசன் விசாரித்து வருகிறார்.
Next Story