என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே ரெயில்வே ஊழியர் வீட்டில் ரூ.1 லட்சம் கொள்ளை
- மர்ம நபர்கள் வீட்டின் பூட்டிடை உடைத்து 10 பவுன் நகை,2 கிலோ வெள்ளி, ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டு பத்மாவதி நகரை சேர்ந்தவர் பாபு . ரெயில்வே ஊழியர். இவர் வீட்டை பூட்டிவிட்டு அம்பத்தூரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டிடை உடைத்து 10 பவுன் நகை,2 கிலோ வெள்ளி, ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து பாபு செவ்வாப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகிறார்கள்.
Next Story






