என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் அருகே மணல் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் வந்த பெண் பலி
    X

    திருவள்ளூர் அருகே மணல் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் வந்த பெண் பலி

    • மண் ஏற்றிக் கொண்டு வந்த லாரி சாமுண்டீஸ்வரி மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
    • திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த அரண்வாயல் அன்னை தெரசா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாமுண்டீஸ்வரி . இவர் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் கொசவன்பாளையம் கிராமத்திற்கு சென்று திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருப்பாச்சூர் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

    அப்போது மண் ஏற்றிக் கொண்டு வந்த லாரி சாமுண்டீஸ்வரி மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்து திருவள்ளூர் தாலுக்கா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை விபத்தில் பலியான சாமுண்டீஸ்வரி உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×