என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவாலங்காடு அருகே விபத்தில் காயமடைந்த வாலிபர் பலி
- குமார் உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
- திருவாலங்காடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
திருத்தணி, காந்தி ரோடு பகுதியை சேர்ந்தவர் குமார்(வயது27).பூ கட்டும் தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த சரவணன், திருமால், பரமு ஆகியோருடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காரில் திருவள்ளூர் நோக்கி சென்றார். திருவாலங்காடு அருேக நாகாத்தாங்கல் என்ற இடத்தில் சென்றபோது திருவாலங்காடு நோக்கி வந்த அரசு பஸ் திடீரென கார் மீது மோதியது. இதில் குமார் உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் பலத்த காயம் அடைந்த குமார் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருவாலங்காடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Next Story






