என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருத்தணி அருகே தீ விபத்து- 10 ஏக்கர் தைலம் தோப்பு எரிந்து நாசம்
- தைலம் தோப்பில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
- திருத்தணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அகூர் கிராமத்தில் மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முனிரத்தினம் என்பவருக்கு சொந்தமான 12 ஏக்கர் தைலம் தோப்பு உள்ளது. இதில் நேற்று மதியம் மர்மமான முறையில் தீப்பற்றி எரிய தொடங்கியது.
காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. இது குறித்து தோப்பின் உரிமையாளர் முனிரத்தினம் திருத்தணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் 10 ஏக்கர் தைலம் தோப்பு முழுவதும் எரிந்து நாசமானது. தீ விபத்து ஏற்பட்டது குறித்து திருத்தணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருத்தணி- சோளிங்கர் மாநில நெடுஞ்சாலை ஒட்டி உள்ள தைலம் தோப்பில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.






