என் மலர்
உள்ளூர் செய்திகள்

நில தகராறில் தம்பதியை தாக்கிய வாலிபர் கைது
- சாமுண்டீஸ்வரி வீடு கட்டுவதற்காக ஜல்லி, மணல், செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை வீட்டின் முன்பு இறக்கி வைத்துள்ளார்.
- சாமுண்டீஸ்வரி திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
திருத்தணி:
திருத்தணி ஒன்றியம் சிறுகுமி ஊராட்சிக்குட்பட்ட வி.சி.ஆர். கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் மனைவி சாமுண்டீஸ்வரி (வயது 25). இவர்களுக்கும் இவரது வீட்டிற்கு அருகே வசிக்கும் மணிகண்டன் (வயது 29) என்பவருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சாமுண்டீஸ்வரி வீடு கட்டுவதற்காக ஜல்லி, மணல், செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை வீட்டின் முன்பு இறக்கி வைத்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மணிகண்டன் சாமுண்டீஸ்வரி மற்றும் அவரது கணவர் ஏகாம்பரத்தை தகாத வார்த்தைகளால் பேசி கல்லால் அடித்ததில் அவருக்கு பல் உடைந்தது மேலும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இதுகுறித்து சாமுண்டீஸ்வரி திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி ஏகாம்பரத்தை தாக்கிய மணிகண்டனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்.






