என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருநின்றவூரில் ரெயில்வே என்ஜினீயர் வீட்டில் 25 பவுன் நகை-பணம் கொள்ளை
    X

    திருநின்றவூரில் ரெயில்வே என்ஜினீயர் வீட்டில் 25 பவுன் நகை-பணம் கொள்ளை

    • கொள்ளைகும்பல் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கத்தை திருடி சென்றுவிட்டனர்.
    • திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

    திருநின்றவூர்:

    திருநின்றவூர், பார்வதி நகரில் வசித்து வருபவர் திருபால். ரெயில்வேயில் என்ஜினீயராக வேலைபார்த்து வருகிறார். இவர் பணி சம்பந்தமாக பெங்களூர் சென்றார். இவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு பம்மலில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதனை நோட்டமிட்ட கொள்ளைகும்பல் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கத்தை திருடி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×