search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கல்பட்டு மாவட்ட அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம்-  கலெக்டர் தகவல்
    X

    செங்கல்பட்டு மாவட்ட அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம்- கலெக்டர் தகவல்

    உரிய கல்வி தகுதிச் சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட ஊராட்சி, ஒன்றிய நகராட்சி,அரசு தொடக்க, நடுநிலை, உயர்மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் 01.06.2022 நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்படவுள்ளது.

    தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வி தகுதிச் சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இது சார்பான காலிப்பணியிட விவரங்கள் முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக்கல்வி அலுவலகம் வட்டாரக் கல்வி அலுவலகங்களின் அறிவிப்புப் பலகையில் வெளியிடப்படும். விண்ணப்பதற்கான கடைசி நாள் மற்றும் நேரம் 06.07.2022 மாலை 5.மணி குறித்த நேரத்திற்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது தகவல் பலகையில் வெளியிடப்படும் காலிப்பணியிடமாறுதலுக்குட்பட்டது.

    விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி

    மதுராந்தகம் கல்வி மாவட்டம். , பார்த்தசாரதி தெரு.

    மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம்,மதுராந்தகம்.

    மின்னஞ்சல் முகவரிdromadurantakam@gmail.com

    செங்கல்பட்டு கல்வி மாவட்டம், அண்ணா சாலை, அறிஞர் அண்ணா நகராட்சி,ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு, மின்னஞ்சல் முகவரி deochengai@gmail.com

    புனித தோமையர் கல்வி மாவட்டம், சி.எல்.சி. வொர்க் ரோடு,அரசு ஆண்கள்

    மேல்நிலைப்பள்ளி வளாகம், குரோம்பேட்டை. மின்னஞ்சல் முகவரி deost.mount@gmail.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தன.

    Next Story
    ×