search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாம்பரம் அருகே செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்த கல்லூரி மாணவி ரெயில் மோதி பலி
    X

    தாம்பரம் அருகே செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்த கல்லூரி மாணவி ரெயில் மோதி பலி

    • குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நிகிதா மீது மோதியது.
    • ரெயில்வே போலீசார் விரைந்து வந்து மாணவி நிகிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தாம்பரம்:

    கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் நிகிதா (வயது19).கிழக்கு தாம்பரத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி சைக்காலஜி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் நிகிதாவுக்கு மழலையர் பள்ளியில் பகுதி நேர ஆசிரியர் பணி கிடைத்தது. இதையடுத்து அவர் முதல் நாளான இன்று காலை பணிக்காக இரும்புலியூர் அருகே செல்போன் பேசியபடி, ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அந்த நேரத்தில் அவ்வழியாக வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நிகிதா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    தகவல் அறிந்ததும் தாம்பரம் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து மாணவி நிகிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×