search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாம்பரம் அருகே 3 கடைகளை உடைத்து கொள்ளை
    X

    தாம்பரம் அருகே 3 கடைகளை உடைத்து கொள்ளை

    • பெரிய இரும்பு கம்பியால் ஷட்டரின் பூட்டை உடைத்து கடைக்குள் புகுந்து பணம், பொருட்களை அள்ளி செல்கிறார்கள்.
    • கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்தை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த முடிச்சூரில் பால் கடை நடத்தி வருபவர் ஜெயபிரகாஷ். நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றார். இன்று அதிகாலை கடையை திறக்க வந்த போது ஷட்டர் பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடைக்குள் சென்று பார்த்த போது பணப்பெட்டியில் இருந்த ரூ.15 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    இதேபால் அதேபகுதியில் உள்ள சந்திரசேகரன் என்பவரின் நாட்டு மருத்து கடைக்குள் புகுந்து ரூ.10 ஆயிரத்தை சுருட்டினர். அருகில் உள்ள செல்போன் கடையின் பூட்டையும் உடைத்தனர். அதில் இருந்த மேலும் சில பூட்டுக்களை உடைக்க முடியாததால் கொள்ளையர்களால் கடைக்குள் செல்ல முடியவில்லை. இதனால் கடையில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்பு உள்ள செல்போன்கள் தப்பியது.

    கொள்ளையர்கள் கடைகளின் பூட்டை உடைக்கும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. 3 பேர் பெரிய இரும்பு கம்பியால் ஷட்டரின் பூட்டை உடைத்து கடைக்குள் புகுந்து பணம், பொருட்களை அள்ளி செல்கிறார்கள்.

    கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்தை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

    Next Story
    ×