என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாம்பரம் பஸ் நிலையத்தில் 9 கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது
    X

    தாம்பரம் பஸ் நிலையத்தில் 9 கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது

    • தாம்பரம் பஸ் நிலையத்தில் மதுவிலக்கு பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
    • கைதான 2 பேரையும் தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    தாம்பரம்:

    சென்னையை அடுத்த தாம்பரம் மாநகர போலீஸ் எல்லைப்பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

    இந்தநிலையில் தாம்பரம் பஸ் நிலையத்தில் மதுவிலக்கு பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு விற்பனைக்காக கஞ்சா கொண்டு வந்திருந்த திரிபுரா மாநிலத்தை சேர்ந்த உதய் சர்கார்(வயது 27), ஜாகிர் உசேன்(29) ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 9 கிலோ கஞ்சா மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான 2 பேரையும் தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×