search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை - மைசூரு இடையே செல்லும் வந்தே பாரத் ரெயிலின் சோதனை ஓட்டம் தொடங்கியது
    X

    சென்னை - மைசூரு இடையே செல்லும் வந்தே பாரத் ரெயிலின் சோதனை ஓட்டம் தொடங்கியது

    • 5-வது வந்தே பாரத் ரெயில் தென்னிந்தியாவின் சென்னை - பெங்களூரு மற்றும் மைசூரு இடையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வந்தே பாரத் ரெயிலின் சோதனை ஓட்டம் தொடங்கியது.
    • இந்தியாவின் 5வது வந்தே பாரத் ரெயில் சேவையை வரும் 11ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

    நாட்டிலேயே அதிக வேகமாக செல்லும் "வந்தே பாரத்" ரெயில் சென்னை ஐ.சி.எப். உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தயாரிக்கப்படுகிறது. 160 கி.மீ. வேகத்தில் இயக்கக் கூடிய இந்த ரெயிலில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. பூஜ்யம் கி.மீ.-ல் இருந்து மணிக்கு 100 கி.மீ. வேகத்தை வெறும் 52 வினாடிகளில் எட்டி விடும்.

    அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் ஓடும். பல்வேறு வசதிகளை கொண்ட இந்த வந்தே பாரத் ரெயில்கள் புதுடெல்லி - வாரணாசி, புதுடெல்லி -ஸ்ரீ மாதா வைஸ்னோ தேவி கத்ரா, காந்தி நகர் - மும்பை மற்றும் அம்ப் அந்தாரா -புதுடெல்லி என 4 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    இந்த நிலையில், 5-வது வந்தே பாரத் ரெயில் தென்னிந்தியாவின் சென்னை - பெங்களூரு மற்றும் மைசூரு இடையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வந்தே பாரத் ரெயிலின் சோதனை ஓட்டம் தொடங்கியது. இந்தியாவின் 5வது வந்தே பாரத் ரெயில் சேவையை வரும் 11ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

    Next Story
    ×