search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்பி எடுக்க முயன்றவரை விரட்டிய ஒற்றை யானை- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
    X

    செல்பி எடுக்க முயன்றவரை விரட்டிய ஒற்றை யானை- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

    • ஒரு ஒற்றை யானை சாலைஓரம் சுற்றி கொண்டு இருந்தது.
    • யானையிடம் செல்பி எடுக்க முயன்றவர் மீது நடவடிக்கை எடுக்க வனத்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதி வழியாக சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் தினமும் ஏராளமான கார், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் அதிகளவில் சென்று வருகிறது.

    புலிகள் காப்பக வனப்பகுதியில் அமைந்துள்ள சாலை என்பதால் அடிக்கடி இந்த சாலையை யானை, சிறுத்தை, புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையை கடப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. வனவிலங்குகள் சாலையை கடக்கும் போது வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்றும், வனவிலங்குகளை போட்டோ, செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    இந்த நிலையில் சத்தியமங்கலம்-மைசூர் சாலையில் காரப்பள்ளம் என்ற பகுதியில் நேற்று மாலை ஒரு ஒற்றை யானை சாலைஓரம் சுற்றி கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மெதுவாக வாகனத்தை இயக்கி அந்த பகுதியை கடந்து சென்றனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அதில் இருந்து இறங்கிய நபர் திடீரென ஒற்றையானையை நோக்கி சென்றார். பின்னர் யானை உடன் சேர்த்து செல்பி எடுக்க முயன்றார். அப்போது திடீரென ஆத்திரம் அடைந்த யானை அந்த நபரை நோக்கி வேகமாக ஓடி வந்தது. இதைப்பார்த்த அந்த நபர் வேகமாக ஓடிவந்து காரில் ஏறி தப்பி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. யானையிடம் செல்பி எடுக்க முயன்றவர் மீது நடவடிக்கை எடுக்க வனத்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×