search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதைப்பொருள் வழக்கில் தேடப்படும் ஜாபர் சாதிக் பற்றி திடுக்கிடும் தகவல்கள்
    X

    போதைப்பொருள் வழக்கில் தேடப்படும் ஜாபர் சாதிக் பற்றி திடுக்கிடும் தகவல்கள்

    • ஜாபர் சாதிக்கின் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் நோட்டீசை அவரது தாய் படம்பிடித்து கிழித்து உள்ளார்.
    • வங்கி கணக்குகளை ஆய்வு செய்து பண பரிவர்த்தனை குறித்து ஏற்கனவே கொடுத்த தகவல்களுடன் ஒப்பிட்டு பார்த்து வருவதாக தெரிவித்தார்.

    சென்னை:

    டெல்லியில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்திய சோதனையின் போது போதை பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ரூ.2 ஆயிரம் கோடிமதிப்புள்ள 50 கிலோ ரசாயனப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மூளையாகச் செயல்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளராகவும், தி.மு.க.வில் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராகவும் இருந்த ஜாபர் சாதிக்கை விசாரிக்க முயன்றபோது தலைமறைவாகிவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் 'லுக்-அவுட்' நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அவரது 8 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன. மேலும் அவரது சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோரையும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே அவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்க்க நிதிஉதவி செய்ததாகவும் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஜாபர் சாதிக் பற்றி மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறும்போது, கோவையில் கடந்த 2022-ம் ஆண்டு ஈஸ்வரன் கோவில் முன்பு நடந்த கார் வெடிப்பு தொடர்பாக தமிழகம் முழுவதும் சந்தேக நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது மூளைச்சலவை செய்யப்பட்ட வாலிபர்களுக்கு சென்னை, கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் பயங்கரவாத பயிற்சி அளிக்கப்பட்டது தெரிந்தது.

    இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் வங்கி கணக்கு பரிவர்த்தனை விபரங்களை ஏற்கனவே டெல்லியை சேர்ந்த மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்படும் ஜாபர் சாதிக், அவரது சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோரது வங்கி கணக்குகளை ஆய்வு செய்து பண பரிவர்த்தனை குறித்து ஏற்கனவே கொடுத்த தகவல்களுடன் ஒப்பிட்டு பார்த்து வருவதாக தெரிவித்தார்.

    இதல் ஜாபர் சாதிக், மற்றும் அவரது சகோதரர்கள் அரபிக் கல்லூரி பேராசிரியர் மற்றும் முன்னாள் மாணவர்கள் வாயிலாக ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பிற்கு ஆட்களை சேர்க்கவும், ஆயுதப்பயிற்சி அளிக்கவும் நிதி உதவி செய்து இருப்பது தெரியவந்து உள்ளது. எனவே அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றார்.

    ஜாபர் சாதிக் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்த போது வெவ்வேறு பெயர்களில் 3-க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட்டுகளை ஜாபர் சாதிக் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்து உள்ளது.

    இதற்கிடையே சென்னை சாந்தோம் அருளானந்தம் தெருவில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் நோட்டீசை அவரது தாய் படம்பிடித்து கிழித்து உள்ளார். அவர் எதற்காக படம் பிடித்தார்? அந்த படம் ஜாபர் சாதிக்கிற்கு அனுப்பட்டதா? மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஜாபர் சாதிக்கின் தாயிடம் விசாரிக்க முடிவு செய்து உள்ளனர். இதற்காக அவருக்கு முறைப்படி சம்மன் அனுப்ப அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    Next Story
    ×