search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலிகிராமத்தில் துபாயில் நர்சு வேலை வாங்கி தருவதாக இளம்பெண்ணிடம் ரூ.1 லட்சம் மோசடி
    X

    சாலிகிராமத்தில் துபாயில் நர்சு வேலை வாங்கி தருவதாக இளம்பெண்ணிடம் ரூ.1 லட்சம் மோசடி

    • குடும்பம் வறுமையில் தவித்து வந்ததால் நர்சு வேலையை தனக்கு வாங்கி தருமாறு இளம் பெண் கேட்டார்.
    • பாபு மற்றும் அருண்குமார் மீது மோசடி, ஏமாற்றுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர்.

    போரூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த நர்சிங் பட்டதாரியான இளம் பெண் ஒருவருக்கு தோழி ஒருவர் மூலம் சாலிகிராமத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தரும் அலுவலகம் நடத்தி வரும் பாபு மற்றும் அருண்குமார் ஆகியோர் அறிமுகமானார்கள்.

    அப்போது அவர்கள் துபாயில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் நர்சு வேலை உள்ளது என்றும் அங்கு சென்றால் மாதம்தோறும் ரூ.3 லட்சம் சம்பளம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறினர்.

    தனது குடும்பம் வறுமையில் தவித்து வந்ததால் நர்சு வேலையை தனக்கு வாங்கி தருமாறு இளம் பெண் கேட்டார். இதற்கு கட்டணமாக ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் பணத்தை பாபு மற்றும் அருண்குமார் பெற்றுக் கொண்டனர்.

    பின்னர் ஒரு மாதம் கழித்து வேலை கிடைத்து விட்டதாக கூறி பணி நியமன ஆணை ஒன்றை இளம் பெண்ணிடம் கொடுத்தனர். இதையடுத்து துபாயில் உள்ள நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது அது போலியானது என்று தெரிந்து வேலை வாங்கி தருவதாக நூதனமான முறையில் பணத்தை சுருட்டியதும் தெரிந்தது.

    இதையடுத்து பண மோசடியில் ஈடுபட்ட பாபு மற்றும் அருண்குமார் இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் இளம் பெண் புகார் அளித்தார்.

    இது தொடர்பாக விருகம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பாபு மற்றும் அருண்குமார் மீது மோசடி, ஏமாற்றுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×