search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் கோவிலில் 1 மாத உண்டியல் காணிக்கை வருமானம் ரூ.2.70 கோடி
    X

    திருச்செந்தூர் கோவிலில் 1 மாத உண்டியல் காணிக்கை வருமானம் ரூ.2.70 கோடி

    • கடந்த மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கடந்த 2 நாட்களாக கோவில் வசந்த மண்டபத்தில் நடைபெற்றது.
    • தங்கம் 1100 கிராம், வெள்ளி 29,300 கிராம், பித்தளை 80 கிலோ, செம்பு 6 கிலோ 500 கிராம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 417-ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருவாய் மாதந்தோறும் எண்ணப்படுகிறது.

    இதன்படி கடந்த மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கடந்த 2 நாட்களாக கோவில் வசந்த மண்டபத்தில் நடைபெற்றது. கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் தலைமையில் இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன் ஆகியோர் முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டது.

    இந்த பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரபணிக் குழுவினர், தூத்துக்குடி ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப்பணிக்குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    இதில் நிரந்தர உண்டியல் மூலம் ரூ.2 கோடியே 70 லட்சத்து 70 ஆயிரத்து 541-ம், தங்கம் 1100 கிராம், வெள்ளி 29,300 கிராம், பித்தளை 80 கிலோ, செம்பு 6 கிலோ 500 கிராம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 417-ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், கண்காணிப்பாளர் ஆனந்தராஜ், ஆய்வர் செந்தில்நாயகி, அறங்காவலர் குழுத்தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ்பாண்டியன் ஆகியோரும், பொதுமக்கள் பிரதிநிதிகளாக சுப்பிரமணியன், கருப்பன், மோகன் ஆகியோர் பார்வையாளர்களாகவும் பங்கேற்றனர்.

    Next Story
    ×