search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்துக்கோட்டையில் பூச்செடி வியாபாரி வீட்டில் ரூ.1½ லட்சம் கொள்ளை
    X

    ஊத்துக்கோட்டையில் பூச்செடி வியாபாரி வீட்டில் ரூ.1½ லட்சம் கொள்ளை

    • திருவள்ளூர், லங்ககாரத் தெருவைச் சேர்ந்தவர் கஜபதி. திருவள்ளூரில் உள்ள தியேட்டரில் வேலை பார்த்து வருகிறார்.
    • வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு 6 பவுன் நகை மற்றும் 775 கிராம் வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போய் இருந்தது.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜலந்தர்ரெட்டி. இவர் அருகே உள்ள பெரம்பூர் கிராமத்தில் பூ, பழச்செடிகள் விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் ஜலந்தர்ரெட்டி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னை சென்றார். நேற்று காலை மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்த போது பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    இது குறித்து ஜலந்தர் ரெட்டி ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருவள்ளூர், லங்ககாரத் தெருவைச் சேர்ந்தவர் கஜபதி. திருவள்ளூரில் உள்ள தியேட்டரில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார். பின்னர் இரவு வந்தபோது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு 6 பவுன் நகை மற்றும் 775 கிராம் வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போய் இருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு கொள்ளை கும்பல் கைவரிசை காட்டி உள்ளனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபபி விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×