என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ரிப்பன் மாளிகை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி கைது
BySuresh K Jangir17 Nov 2022 8:57 AM GMT
- போலீசார் விரட்டி சென்று புளியந்தோப்பை சேர்ந்த அருண் என்பவரை கைது செய்தனர்.
- அருண் மீது கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சென்னை:
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை அருகே நேற்று நள்ளிரவு 3 இளைஞர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி செல்போன்களை பறித்தனர்.
ரோந்து போலீசாரை கண்டதும் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரும் இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு ஓடினர்.
போலீசார் விரட்டி சென்று புளியந்தோப்பை சேர்ந்த அருண் (18) என்பவரை கைது செய்தனர். இவர் மீது கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தப்பி ஓடிய புளியந்தோப்பை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி சந்தோஷ் என்கிற தவக்களையை போலீசார் தேடி வருகின்றனர். கைதான அருணிடம் நடத்திய விசாரணையில், சூளை நெடுஞ்சாலையில் சாவியுடன் நிறுத்தி இருந்த ஒரு இருசக்கர வாகனத்தை திருடி வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X