என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொரோனா பாதிப்பு- ஆர்.எம்.வீரப்பனுக்கு தீவிர சிகிச்சை
- எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
- கிரீம்ஸ்ரோடு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
சென்னை:
எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கிரீம்ஸ்ரோடு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தொற்று முழுமையாக குணம் அடைந்ததும் இன்னும் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஆர்.எம்.வீரப்பன் விரைவில் குணமடைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Next Story






